Home » 15 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை எச்சரிக்கை

15 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை எச்சரிக்கை

சென்னை:

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியின் தாக்கத்தால், இன்று தமிழகத்தின் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி–மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, கடலூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, திருவள்ளூர், விழுப்புரம், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இடி–மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *