Home » Ditwah’ புயல் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரைகளை நோக்கி நகரத் தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது…

Ditwah’ புயல் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரைகளை நோக்கி நகரத் தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது…

Ditwah Cyclone Latest News: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதற்கிடையில், வங்கக் கடலில் உருவான Ditwah புயல் தற்போது தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால், அடுத்த இரண்டு நாட்களுக்கு பரவலமாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.  

Ditwah புயல் எங்கு? எப்போது கரையை கடக்கும்?

அதாவது, நவம்பர் 26ஆம் தேதி  தென்மேற்கு வங்கக் கடல் மற்றும்  அதனை ஒட்டிய தென்கிழக்கு இலங்கை இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நவம்பர் 26ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் வலுப்பெற்று, நேற்று காலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமகா மேலும் பெற்று, நேற்று டிட்வா புயலாக மேலும் வலுப்பெற்று அங்கிருந்து நகர்ந்து வருகிறது. 

வங்கக் கடலில் இலங்கை அருகே நிலைக்கொண்டிருந்த Ditwah புயல்  தற்போது தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Ditwah புயல் கடந்த 6 மணி நேரத்தில் வடக்கு-வடமேற்கு நோக்கி 7 கிமீ வேகத்தில் நகர்ந்து, இன்று நவம்பர் 28, 2025 அன்று காலை 05.30 மணிக்கு அதே பகுதியில் மையம் கொண்டுள்ளது.   Ditwah புயல்  திருகோணமலை இலங்கைக்கு தென்மேற்கே சுமார் 50 கிமீ, மட்டக்களப்பிலிருந்து (இலங்கை) 90 கிமீ வடமேற்கே, ஹம்பாந்தோட்டைக்கு (இலங்கை)  வடக்கே 230 கிமீ, புதுச்சேரிக்கு (இந்தியா) தென்கிழக்கே 440 கிமீ மற்றும் சென்னைக்கு தெற்கே 540 கிமீ தொலைவில் மையம் கொண்டிருக்கிறது. 

இது இலங்கை கடற்கரை மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடா வழியாக வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து நவம்பர் 30 ஆம் தேதி அதிகாலையில் வட-வடமேற்கு நோக்கி நகர்ந்து, வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைகளுக்கு அருகில் கரையை கடக்கும என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்திற்கு ரெட் அலர்ட்

Ditwah புயல் காரணமாக, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யக் கூடும்.  மேலும், இன்று ராமநாதபுரம், சிவங்ககை, திருசசி, அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் மிக கனமழையும், தூத்துக்குடி, விருதுநகர், பெரம்பலூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், நவம்பர் 29ஆம் தேதி திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக் கூடும். மேலும், புதுக்கோட்டை, திருச்சி, சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், நவம்பர் 30ஆம் தேதி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *