அரசு பார்வை
  • Home
  • இந்தியா செய்திகள்

    கேரள சட்டசபை தேர்தல்: பாஜக 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

    • March 19, 2026

    டெல்லி தீ விபத்து: பலியானோரின் குடும்பத்தினரை சந்தித்து கெஜ்ரிவால் ஆறுதல்

    • March 19, 2026

    புதுச்சேரி: பாஜக குழுவை சந்திக்காமல் சென்ற ரங்கசாமி

    • March 19, 2026

    கேரளத்தில் பாஜக 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

    • March 19, 2026
    Popular Tags:
    Narendra Modi,Indian Politics,Breaking News,Amit Shah,election news india
    See All
  • தொழில்நுட்பம்
    உலகின் முன்னணி 10 ஐடி நிறுவனங்கள் – முதல் இடத்தில் யார்? முழு தகவல்!

    உலகின் முன்னணி 10 ஐடி நிறுவனங்கள் – முதல் இடத்தில் யார்? முழு தகவல்!

    • January 23, 2026
    யூபிஐ பரிவர்த்தனையில் புதிய தீர்வு – தவறாக அனுப்பிய பணத்தை மீட்டுக்கொள்ளலாம்!

    யூபிஐ பரிவர்த்தனையில் புதிய தீர்வு – தவறாக அனுப்பிய பணத்தை மீட்டுக்கொள்ளலாம்!

    • January 23, 2026

    முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் நிறுவனத்துடன் கைக்கோர்த்த அஜித் – எதிர்பாராத கூட்டணி, வெளியான அறிவிப்பு!

    • November 13, 2025

    அத்தியாவசிய பணிகளுக்கு மானாமதுரை-மதுரை நேரடி அரசு பேருந்து சேவையை தொடங்கிவைத்த எம்எல்ஏ.

    • September 8, 2022
    Popular Tags:
    Lifestyle,Ajithkumar,IT,Ambani,IT Company
    See All
  • உலக செய்திகள்

    ஈராக், குவைத் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் – ஈரான் ஊடகம் தகவல்

    • March 19, 2026

    ஈரானுக்கு எதிராக அரபு நாடுகள் ஒன்றுபட்டு கண்டனம் தெரிவித்தன

    • March 19, 2026

    பாகிஸ்தானில் கட்டிட மேற்கூரை இடிந்து 8 பெண்கள் பலி

    • March 16, 2026

    அமெரிக்க எரிசக்தி துறையில் ரிலையன்ஸ் பிரம்மாண்ட ஒப்பந்தம்

    • March 11, 2026
    Popular Tags:
    World news,Worldnews,Pakistan,Donald trump,Breaking News
    See All
  • தமிழ்நாடு செய்திகள்

    “டோரேமான்” இயக்குநர் ஷிபயாமா காலமானார்

    • March 19, 2026

    கேரள சட்டசபை தேர்தல்: பாஜக 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

    • March 19, 2026

    டெல்லி தீ விபத்து: பலியானோரின் குடும்பத்தினரை சந்தித்து கெஜ்ரிவால் ஆறுதல்

    • March 19, 2026

    “மனிதன் தெய்வமாகலாம்” படத்தின் “தங்கரத்தினமே” பாடல் வெளியீடு

    • March 19, 2026
    Popular Tags:
    Tamil cinema news,Narendra Modi,Indian Politics,Breaking News,Film News
    See All
  • விளையாட்டு

    திலக் வர்மாவுக்கு பேட் பரிசு அளித்த ராம் சரண்

    • March 19, 2026

    2வது டி20: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி

    • March 17, 2026

    கெயில்-கோலி இல்லை: ஐபிஎல் ஆபத்தான ஓப்பனர்கள் குறித்து புஜாரா கருத்து

    • March 17, 2026

    பீல்டிங்கில் அதிக கவனம்: மோர்னே மோர்கல் பேட்டி

    • March 5, 2026
    Popular Tags:
    cricket,CricketNews,T20worldcup,TeamIndia,SportsNews
    See All

சாட்ஜிபிடி மூலம் தற்கொலை வழி தேடிய மாணவிகள்: எலான் மஸ்க் அதிர்ச்சி

  • March 9, 2026
  • மித்ரா
  • 0
    • தமிழ்நாடு செய்திகள்

சூரத்,

குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு கல்லூரி மாணவிகள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை காலை, அந்த மாணவிகள் வழக்கம்போல் கல்லூரிக்கு செல்வதாக வீட்டில் தெரிவித்து வெளியேறினர். ஆனால் மாலை நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் கவலையடைந்தனர். பல இடங்களில் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் விசாரித்தும் மாணவிகள் பற்றிய தகவல் கிடைக்கவில்லை. இதையடுத்து பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

 

புகார் கிடைத்தவுடன் காவல்துறையினர் உடனடியாக விசாரணையை தொடங்கினர். மாணவிகளின் செல்போன் தகவல்கள் மற்றும் அவர்கள் சென்றிருக்கக்கூடிய இடங்கள் குறித்து போலீசார் தீவிரமாக கண்காணித்தனர். இதன்போது அவர்கள் சூரத்தில் உள்ள சுவாமிநாராயண் கோவிலுக்கு சென்றிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் உடனடியாக அந்த கோவிலுக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது கோவில் வளாகத்தின் வெளியே காணாமல் போன மாணவிகளில் ஒருவருக்குச் சொந்தமான ஸ்கூட்டர் நிறுத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் சந்தேகம் ஏற்பட்ட போலீசார், கோவில் வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் (சிசிடிவி) காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அந்த காட்சிகளில், இரண்டு மாணவிகளும் கோவில் வளாகத்தில் உள்ள கழிப்பறைக்குள் செல்வது பதிவாகியிருந்தது. அதன் பின்னர் அவர்கள் வெளியே வராதது தெரியவந்தது. உடனடியாக போலீசார் அந்த இடத்தைச் சோதனை செய்தபோது, கழிப்பறைக்குள் இருவரும் உயிரிழந்த நிலையில் கிடந்தனர்.

மாணவிகளின் உடல்களுக்கு அருகில் மயக்க மருந்து பாட்டில்கள் மற்றும் சிரிஞ்சுகள் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதனால் அவர்கள் தாங்களே மயக்க மருந்தை செலுத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து காவல் உதவி ஆணையர் என்.பி. கோஹில் கூறுகையில், உயிரிழந்த இரண்டு மாணவிகளும் சிறுவயது முதலே நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர். அவர்களில் ஒருவர் முதலாமாண்டு வணிகவியல் படித்து வந்தார். மற்றொரு மாணவி இரண்டாம் ஆண்டு படித்து வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், போலீசார் அவர்களின் செல்போன்களை ஆய்வு செய்தபோது சில அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்தன. அதில், சாட் ஜி.பி.டி. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தளத்தில் தற்கொலை செய்ய எந்த மருந்துகளை பயன்படுத்தலாம் என்பது குறித்து அவர்கள் தேடியிருப்பது தெரியவந்தது. அதேபோல், ஒரு பெண் மயக்க மருந்தை செலுத்தி தற்கொலை செய்து கொள்ளும் காட்சியின் ஸ்கிரீன்ஷாட்டும் அவர்களின் செல்போனில் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. செயற்கை நுண்ணறிவு தளங்களை தவறாக பயன்படுத்தும் அபாயங்கள் குறித்து பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கல்லூரி மாணவிகள் சாட் ஜி.பி.டி. மூலம் தற்கொலைக்கு வழி தேடியதாக கூறப்படும் இந்த சம்பவம் குறித்து தொழில்நுட்ப உலகின் முக்கிய நபரான டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளத்தில் இந்த சம்பவம் குறித்து வெளியிடப்பட்ட ஒரு பதிவிற்கு பதிலளித்த அவர், ஒரே வார்த்தையில் தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தினார். “ஐயோ கொடுமை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதுடன், மாணவிகளின் மரணத்திற்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்து மேலும் தகவல்கள் சேகரித்து வருகின்றனர்.

 
Tags: AIConcerns, AIUsage, BreakingNews, ChatGPT, CollegeStudents, ElonMuskReaction, GujaratNews, IndiaNews, SocialMediaDebate, StudentSuicideCase, SuratNews, TechEthics, TechnologyImpact, TragicIncident, YouthMentalHealth
மித்ரா

ஈரான் போர் நிலைமை: நாளை பிரதமர் மோடி ஆலோசனை
சீன ஆயுதங்களை அதிகம் இறக்குமதி செய்யும் பாகிஸ்தான்: 80% வாங்குகிறது

Leave a Reply Cancel Reply

Latest

இந்தியா செய்திகள்

“நிலவில் தரையிறங்கும் இடம் தேர்வு – ‘சந்திரயான்-4’ திட்டம் புதிய கட்டத்தை எட்டியது”

  • February 10, 2026
இந்தியா செய்திகள்

டெல்லி தீ விபத்து: பலியானோரின் குடும்பத்தினரை சந்தித்து கெஜ்ரிவால் ஆறுதல்

  • March 19, 2026
இந்தியா செய்திகள்

“டெல்லியில் அமித்ஷா–அண்ணாமலை சந்திப்பு”

  • December 4, 2025
இந்தியா செய்திகள்

இந்தியா-ரஷ்யா வர்த்தகம் 80% உயர்வு: புதின் மகிழ்ச்சி

  • December 5, 2025
அரசியல்

2-ம் ஆண்டு நினைவு தினம்: விஜயகாந்த் நினைவிடத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி

  • December 28, 2025

Follow Us

Recent Posts

லைகா–விஷால் வழக்கு: நீதிபதி விலகல்; மாற்று பெஞ்சில் விசாரணைக்குப் பதிவுத் துறைக்கு உத்தரவு

  • November 14, 2025

இளையராஜா படங்களை சமூக ஊடகங்களில் பயன்படுத்த தடை — நீதிமன்றம் அதிரடி ஆணை”

  • November 21, 2025

“ஹரிஷ் கல்யாண் – ‘தாஷமக்கான்’ படத்தின் முதல் லுக் வெளியீடு!”

  • November 22, 2025

“அஜித்துடன் எடுத்த ஒரு செல்பி… ஆனந்தக் கண்ணீர் விட்ட மலேசிய ரசிகை!”

  • December 4, 2025

நடிகர் தர்ஷன் கொலை வழக்கு: வரும் 17ஆம் தேதி முதல் சாட்சி விசாரணை தொடக்கம்

  • December 5, 2025

ஹெபா படேல் நடிப்பில் ‘இஷா’ ஹாரர் படம் – கிளிம்ப்ஸ் வெளியீடு

  • December 5, 2025

வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை கைப்பற்றுகிறதா நெட்பிளிக்ஸ்?

  • December 5, 2025

“நீ அழ வேண்டாம்… நான் இருக்கிறேன்!” – ரிஷப் ஷெட்டிக்கு பஞ்சுருளி ஆசீர்வாதம்

  • December 6, 2025

“அஜித்தின் கார் ரேஸ் பயணம் ஆவணப்படம்: இயக்கம் ஏ.எல். விஜயா?”

  • December 6, 2025

“பெரிய கூட்டமே வேல செய்கிறது: இயக்குநர் மோகன் ஜி”

  • December 6, 2025

Categories

  • Uncategorized (2)
  • அரசியல் (233)
  • ஆரோக்கியம் / சுகாதாரம் (18)
  • ஆன்மிகம் (13)
  • இந்தியா செய்திகள் (168)
  • உலக செய்திகள் (167)
  • கல்வி / வேலைவாய்ப்பு (6)
  • சினிமா / பொழுதுபோக்கு (182)
  • தமிழ்நாடு செய்திகள் (1,117)
  • தொழில்நுட்பம் (7)
  • வணிகம் / பொருளாதாரம் (7)
  • விளையாட்டு (191)
தமிழ்நாடு செய்திகள்

“டோரேமான்” இயக்குநர் ஷிபயாமா காலமானார்

இந்தியா செய்திகள்

கேரள சட்டசபை தேர்தல்: பாஜக 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

இந்தியா செய்திகள்

டெல்லி தீ விபத்து: பலியானோரின் குடும்பத்தினரை சந்தித்து கெஜ்ரிவால் ஆறுதல்

தமிழ்நாடு செய்திகள்

“மனிதன் தெய்வமாகலாம்” படத்தின் “தங்கரத்தினமே” பாடல் வெளியீடு

தமிழ்நாடு செய்திகள்

50 அதிகாரிகள் இடமாற்றம்: அறிவிக்கப்படாத நெருக்கடி? – தேர்தல் ஆணையம் மீது மம்தா சாடல்

Related Posts

மேற்காசிய மோதல்: உயிரிழந்த 2 பேரின் உடல்கள் இன்று இந்தியா வருகை

  • March 17, 2026
  • 5
  • 0
  • 0

மேற்கு வங்க தேர்தல்: மம்தாவுக்கு எதிராக சுவேந்து அதிகாரி போட்டி

  • March 17, 2026
  • 3
  • 0
  • 0

தேர்தல் விதி அமல்: ரூ.23 கோடி பணம், பொருட்கள் பறிமுதல்

  • March 17, 2026
  • 6
  • 0
  • 0

நாடு முழுவதும் 12 ஆயிரம் இடங்களில் சிலிண்டர் சோதனை தீவிரம்

  • March 17, 2026
  • 3
  • 0
  • 0

திருச்சி அரசு மருத்துவ நிலையம்: சிறுவன் உயிரிழப்பு, அண்ணாமலை கண்டனம்

  • March 17, 2026
  • 4
  • 0
  • 0

தூத்துக்குடி மாணவி விவகம்: பெற்றோருக்கு ஆறுதல் கூறிய பழனிசாமி

  • March 17, 2026
  • 7
  • 0
  • 0

291 தொகுதிகள்: திரிணாமுல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு, பவானிபூரில் மம்தா போட்டி

  • March 17, 2026
  • 4
  • 0
  • 0

மறைந்த தலைவர்கள் சிலைகள் மறைக்க தேவையில்லை: தேர்தல் ஆணையம்

  • March 17, 2026
  • 6
  • 0
  • 0

பெரிய தவறு செய்தேன்: ஓ.பன்னீர்செல்வம் ஒப்புதல்

  • March 17, 2026
  • 5
  • 0
  • 0

Created by Arasu Parvai. Powered by Inclick. © 2026

  • Home
  • இந்தியா செய்திகள்
  • தொழில்நுட்பம்
  • உலக செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • விளையாட்டு
×Close