Home » ஜூனியர் கால்பந்து போட்டியில் தமிழ்நாடு அணி வெற்றி…

ஜூனியர் கால்பந்து போட்டியில் தமிழ்நாடு அணி வெற்றி…

லக்அனந்தபூர்: ஆந்திர மாநிலம் அனந்தபூரில் ஜூனியர் மகளிர் தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு அணி தனது முதல் ஆட்டத்தில் ஆந்திராவை 12-0 என்ற கணக்கில் முறியடித்தது.

தொடர்ந்து, தமிழ்நாடு அணி தனது 2வது ஆட்டத்தில் நேற்று ராஜஸ்தான் அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் தமிழ்நாடு அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. தமிழ்நாடு அணிக்காக 40வது நிமிடத்தில் எஸ். தர்ஷினியும், 55வது நிமிடத்தில் அன்விதா ரகுராமனும் கோல் செய்து அணியை முன்னிலையில் நிறுத்தினர்.

தமிழ்நாடு அணி தனது அடுத்த ஆட்டத்தில் நாளை (22ம் தேதி) அருணாச்சலப் பிரதேச அணியுடன் மோத உள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *