புதுடில்லி:
டில்லி செங்கோட்டை அருகே நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த வழக்கில் கைதான ஜசிர் பிலால் வானியை விசாரிக்கும் போது, டில்லியில் ஹமாஸ் பாணியில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது என்ஐஏ சோதனையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

டில்லி செங்கோட்டையில் கடந்த 10ஆம் தேதி ஏற்பட்ட கார் குண்டுவெடிப்பு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட காரை ஓட்டி வந்தவர் ஹரியானா பரிதாபாத் அல்-பலாஹ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் உமர் நபி என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

அதே பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் இன்னும் சில மருத்தவர்களுக்கும் இந்த பயங்கரவாத சதியுடன் தொடர்பு இருப்பது தொடக்க விசாரணையிலேயே உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அவர்களை பாதுகாப்பு அமைப்புகள் கைது செய்து, விரிவான விசாரணை நடத்தி வருகின்றன.