Home » ஜி20 மாநாட்டில் பங்கேற்க தென் ஆப்பிரிக்கா பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி

ஜி20 மாநாட்டில் பங்கேற்க தென் ஆப்பிரிக்கா பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி

தென் ஆப்பிரிக்காவில் ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி தென் ஆப்பிரிக்கா பயணம் மேற்கொள்கிறார்.

புதுடெல்லி: தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நவம்பர் 21 முதல் 23 வரை ஜி20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளதாகவும், அதற்காக அவர் ஜோகன்னஸ்பர்க்கு பயணம் மேற்கொள்கிறார் என்றும் மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மாநாட்டில் நடைபெறும் 3 முக்கிய அமர்வுகளில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். இதில் காலநிலை மாற்றம், எரிசக்தி பாதுகாப்பு, நிலையான பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அவர் பேச உள்ளார்.

உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக, பல உலகத் தலைவர்களுடனும் பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார்.

மேலும் இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா தலைவர்கள் பங்கேற்கும் சிறப்பு கூட்டத்திலும் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *