புதுடில்லி: இந்தியப் பெருங்கடல் பாதுகாப்பை, அதனை ஒட்டியுள்ள அனைத்து நாடுகளும் உறுதி செய்ய வேண்டும் என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் பிராந்திய பாதுகாப்பை வலுப்படுத்தவும், அதனை ஒட்டியுள்ள நாடுகளுக்கு இடையே நெருக்கமான ஒத்துழைப்பை உருவாக்கவும் ‘கொழும்பு பாதுகாப்பு மாநாடு’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.
டில்லியில், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் இந்த அமைப்பின் 7வது மாநாடு நடைபெற்றது. இதில் இலங்கை, வங்கதேசம், மாலத்தீவு, மொரிசியஸ் ஆகிய உறுப்பு நாடுகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். செஷெல்ஸ் பார்வையாளர் நாடாகவும், மலேசியா விருந்தினர் நாடாகவும் பங்கேற்றன.
இந்தக் கூட்டத்தில் அஜித் தோவல் பேசியதாவது:
“இந்தியப் பெருங்கடல் என்பது நமது பெரும் பாரம்பரியச் செல்வம். இதனை பாதுகாப்பது நமது மிகப்பெரும் கடமை. இந்தியப் பெருங்கடலின் நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பை, அதனைச் சுற்றியுள்ள நாடுகள் ஒன்றிணைந்து உறுதி செய்ய வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.

