Home » கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க, டி.ஆர்.டி.ஓ., தயாரித்துள்ள ‘2டிஜி’ மருந்து வினியோகத்தை, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (மே 17) துவக்கி வைக்கிறார்.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க, டி.ஆர்.டி.ஓ., தயாரித்துள்ள ‘2டிஜி’ மருந்து வினியோகத்தை, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (மே 17) துவக்கி வைக்கிறார்.

கொரோனா தொற்று ஏற்பட்டு, மிதமானது முதல், தீவிர பாதிப்பு உள்ளவர்களுக்கு சிகிச்சையளிக்க, ‘2டிஜி’ எனப்படும் தடுப்பு மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்த, இந்திய மருந்து கட்டுப்பாடு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.இந்த மருந்தை, டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த மருந்து வினியோகத்தை, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று துவக்கி வைக்கிறார். டில்லியில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகளுக்கு,10 ஆயிரம் 2டிஜி மருந்து பாக்கெட்டுகளை வழங்குகிறார்.’பொடி வடிவில் உள்ள இந்த மருந்தை, தண்ணீரில் கரைத்து கொடுக்க வேண்டும். இந்த மருந்து, வைரசால் பாதிக்கப்பட்ட செல்க ளில் செயல்பட துவங்கும். இந்த மருந்தால், உயிர் பலியும் வெகுவாக குறைவதுடன், ஆக்சிஜன் தேவை யும் குறையும்’ என, இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *