மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடியின் உருக்கமான பிரசாரம்
பராக்பூரில் நடந்த இறுதிகட்ட பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி மக்களிடம் உருக்கமாக பேசினார். “சுதந்திரப் போருக்கு வலிமை அளித்த பராக்பூர் தான் மேற்கு வங்க மாற்றத்துக்கான பாதையை அமைக்கிறது. அனைவரது மத்தியிலும் வாழ்வதில் தான் நான் மகிழ்ச்சியை காண்கிறேன். நீங்களே எனது குடும்பம்” என்று அவர் கூறினார். மேற்கு வங்கத்துக்கு சேவையாற்றுவதும், காப்பாற்றுவதும் வெறும் விதியல்ல, எனது கடமை என்று வலியுறுத்தினார்.

மாநிலத்தின் ஆளுமைகளிடமிருந்து உத்வேகம் பெற்று, மக்களின் அன்பைப் பெற்றுள்ளதாக மோடி கூறினார். “மாநிலம் முழுவதும் எதிரொலிக்கும் ஒரே வார்த்தை, மாற்றம் தேவை, பாரதிய ஜனதா கட்சி அரசு வேண்டும்” என்று அவர் சுட்டிக்காட்டினார். நேர்மையான ஆட்சியை மக்கள் விரும்புகின்றனர் என்று கூறிய அவர், இது மேற்கு வங்கத்தின் கடைசி பிரசார நிகழ்வு என்பதை நினைவூட்டினார்.
மே 4-ம் தேதிக்குப் பிறகு பாரதிய ஜனதா கட்சியின் பதவியேற்பு விழாவுக்கு திரும்புவேன். அங்கு பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கையுடன் செல்கிறேன். அது எனது உற்சாகத்தை மேலும் அதிகரிக்கிறது என்று மோடி தெரிவித்தார். ஹெலிகாப்ப்டரில் இருந்து இங்கு வந்தபோது, இரண்டு கிலோமீட்டர் நீளமுள்ள பாதையில் இரு புறமும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்ததை அவர் சொன்னார்.
தற்போதைய திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியின் கீழ் மாநிலத்தில் தொழில்துறை நடவடிக்கைகள் குறைந்துள்ளன. தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. எதிர்கால வளர்ச்சிக்கு திரிணமூல் காங்கிரஸ் அரசுக்கு தெளிவான செயல் திட்டம் இல்லை என்று மோடி விமர்சித்தார். “இரட்டை இன்ஜின் அரசு தேவை. மாநில அரசும் மத்திய அரசும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே விரைவான வளர்ச்சி சாத்தியம். திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி கலைக்கப்பட வேண்டும்” என்று அவர் கேட்டுக்கொண்டார்.
மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி ஐந்து உத்தரவாதங்களை அளித்தார்.
-
காலதவறாத அரசு வேலை அமர்த்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
-
தற்போதுள்ள அனைத்து அரசு வேலை காலி பணியிடங்களும் தாமதமின்றி நிரப்பப்படும்.
-
திறமைக்கு ஏற்ற வேலை உருவாக்கி தரப்படும்.
-
மேற்கு வங்கத்தில் உள்ள அரசு ஊழியர்கள் ஏழாவது ஊதியக் குழுவின் பலன்களைப் பெறுவார்கள்.
-
கிராமங்களில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க ஜி-ராம்-ஜி திட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும்.
பராக்பூரில் நடந்த இந்தப் பிரசார கூட்டம் மேற்கு வங்கத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மோடியின் உரை மாற்றத்தின் தேவையை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளது