திருப்பதி: திருப்பதியில் சர்வ தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க நேற்றைய தினம் (நவம்பர் 20-ஆம் தேதி) 5 மணி நேரம் ஆனது. வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் 9 காத்திருப்பு அறைகள் நிரம்பி, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருமலைத் திருப்பதி வெங்கடாசலபதியை தரிசிக்க தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். பண்டிகை நாட்களில் இந்த எண்ணிக்கை லட்சக்கணக்காக உயர்கிறது. எந்த நேரத்திலும் ஏழுமலையான் தரிசனத்துக்கு அதிகமான பக்தர்கள் வருவதால் பொதுவாக கூட்டம் காணப்படும்.
நவம்பர் 20-ஆம் தேதி மட்டும் மொத்தம் 50,140 பேர் சுவாமியை தரிசனம் செய்துள்ளனர். மேலும் 19,434 பேர் மொட்டை அடித்துக் கொண்டனர். ஒரே நாளில் உண்டியல் காணிக்கை ரூ. 3.35 கோடி வசூலாகியுள்ளது.
சர்வ தரிசனப் பாதையில் சாமி தரிசனம் செய்ய சுமார் 5 மணி நேரம் எடுத்தது. வைகுண்டம் க்யூ காம்ப்ளெக்ஸில் உள்ள 9 காத்திருப்பு அறைகள் நிரம்பிய நிலையில் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ரூ.300 சிறப்பு தரிசனத்திற்கும் சுமார் 5 மணி நேரத்திற்கு மேல் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. நடைபாதையாக வந்த பக்தர்களுக்கு 2 மணி நேரம் காத்திருப்பு இருந்தது. மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான தரிசனத்திலும் 2 முதல் 3 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியிருந்தது.
திருப்பதியில் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவு ஒவ்வொரு மாதமும் 24-ஆம் தேதி (தேதி மாறுபடலாம்; அறிவிப்பு 21-ஆம் தேதி வெளியிடப்படும்) தொடங்குகிறது. ஒவ்வொரு கணக்கிலும் அதிகபட்சம் 6 டிக்கெட்டுகள் வரை புக் செய்ய முடியும். கூடுதலாக லட்டு வேண்டுமானால் தனியாக கட்டணம் செலுத்தி பெறலாம்.
ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் புக்கிங் செய்ய, குடும்ப உறுப்பினர்களின் ஆதார் கார்டு, பாஸ்போர்ட் அல்லது வாக்காளர் அடையாள அட்டை போன்ற எதாவது ஒருபட்ச ஆவணத்தை இணைக்க வேண்டும். அறை முன்பதிவு செய்ய அன்றைய தினம் பிற்பகல் 3 மணிக்கு புக்கிங் ஸ்லாட் திறக்கப்படும்; அந்த நேரத்தில் முன்பதிவு செய்யலாம்.
ரூ.300 தரிசன டிக்கெட்டும், அறை முன்பதிவும் சாதாரண இணைய வேகத்தில் எளிதில் கிடைக்காததால், உயர் வேக (ஹை-ஸ்பீடு) இணைய இணைப்பு இருந்தால்தான் பதிவைச் செய்ய இயலும்.

