ஆந்திரப் பிரதேசம், புட்டபர்த்தி:
ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு பிறந்த நாள் கொண்டாட்டம் கடந்த நவம்பர் 13ஆம் தேதி தொடங்கி வரும் 24ஆம் தேதி வரை புட்டபர்த்தியில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில் உலகின் 140 நாடுகளில் இருந்து பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர். இந்த விழாவில் பங்கேற்க ஜனாதிபதி திரவுபதி முர்மு புட்டபர்த்திக்கு வருகை தந்தார்.
புட்டபர்த்தி ஸ்ரீ சத்ய சாய் விமான நிலையத்திற்கு வந்த ஜனாதிபதியை, ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு பூங்கொத்து அளித்து வரவேற்றார். பின்னர், பூர்ணசந்திரா ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற ஸ்ரீ சத்ய சாய் பாபா நூற்றாண்டு விழாவின் சிறப்பு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு உரையாற்றினார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை
உரையில் அவர் கூறியதாவது:
“பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபா கோடிக்கணக்கான மக்களை சேவையில் ஈடுபட ஊக்குவித்தார். ‘மக்களுக்கு செய்யும் சேவையே கடவுளுக்கு செய்யும் சேவை’ என்ற கொள்கையை செயல்படுத்தினார். தன்னலமற்ற சேவையில் ஈடுபடவும், ஆன்மிகத்தை சமூக நலனுக்கு பயன் அளிக்கும் வகையில் செயல்படவும் அவர் வழிவகுத்தார்.”
அவர் மேலும் கூறினார்:
“அவரது போதனைகள் உலகம் முழுவதும் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு உதவும் செயற்பாடுகளுக்குத் தூண்டலாக இருக்கின்றன. இந்த உபதேசங்கள் காலத்தால் அழியாதவை; மனித குலத்திற்கு வழிகாட்டுதலாக நீடிக்கும்.”
முக்கிய ஆன்மீகச் செய்திகள்
பகவான் சத்ய சாய் பாபா நம்பிய கோட்பாடுகளை அவர் நினைவுகூர்ந்தார்:
“உலகமே ஒரு கல்விக்கூடம்; அதில் உண்மை, அன்பு, நன்னடத்தை, அகிம்சை, அமைதி — இந்த ஐந்து மதிப்புகளே பாடத்திட்டம்.”
அவரது உரை:
“ஜெய் ஹிந்த், ஜெய் பாரத்”
என்ற முழக்கத்துடன் நிறைவடைந்தது.

